சென்னை எம்.ஆர்.சி நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கொள்கையும் வெளியிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் முதல்வர் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் மணப்பாறை, தருமபுரி உள்ளிட்ட 4 இடங்களில் தொழிற்பேட்டைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், இந்த ஒப்பந்தங்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 75 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 20 தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை தொடங்கி தற்போது முதல்வர் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.