கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்நிலையில் நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் புதியதாக 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “நேற்று ஒரெ நாளில் 759 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ள நிலையில் சென்னையில் மட்டும் புதிதாக 294 பேர் பாதிக்கபட்டுள்ளனர் அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 63 பேருக்கும், கோவையில் 58 பேருக்கும் புதிதாக தொற்று உறுதிசெய்யபட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்று மட்டும் 547 பேர் கொரோனாவிலிருந்து குனமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தமிழகத்தில் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரெ நாளில் 67, 269 மாதிரிகள் பரிசோதனை செய்ய்யபட்டுள்ளது. கள்ளகுரிச்சியில் புதிதாக எந்த ஒரு தொற்றும் கண்டறியப்படவில்லை இதேபோன்று மேலும் 19 மாவட்டங்களில் ஒற்றை இலக்கில் தொற்று கண்டரியபட்டுள்ளது.