தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், நாளையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது.
தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நாளை இரவு 7 மணியுடன் நிறைவு பெறும், என தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவித்திருந்தார். இந்நிலையில், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில், திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகளையும், தொகுதியில் தாங்கள் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளையும் அச்சிட்டு, துண்டு பிரசுரங்களாக வீடுகள் தோறும் அளிக்கும் பணியில், அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட, மாநில, தேசிய தலைவர்களும் தமிழகத்தில் பரப்புரையில் ஈடுபட்டனர். மேலும், ஆட்டோ, வேன்களில் ஒலிபெருக்கி பரப்புரையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை தேர்தல் பரப்புரை முடிவடையும் நிலையில், வாக்கு சேகரிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.