திருவாரூரில் மருத்துவர் சமுதாயத்திற்கு ஐந்து சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சலூன்கடைகளை அடைத்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில், மருத்துவர் சமுதாயத்திற்கு ஐந்து சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சலூன்கடைகளை அடைத்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஐந்து சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், மருத்துவ சமுதாயத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட சலூன் கடை உரிமையாளர்கள், கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலும் 80-க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.