கிராமத்தில் ஏழை மக்களுக்கு சொந்தமாக நிலம் வாங்கி, கான்கிரிட் வீடு கட்டி கொடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் ஆயிரத்து 745 கோடி ரூபாய் மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட 9 பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், விவசாயிகள் பங்களிப்போடு குடிமராமத்து பணிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே, தமிழக அரசு மீது குறை கூறுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் கொண்டு வந்து சாதனை படைத்த அரசு, தமிழக அரசு என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கிராமத்தில் ஏழை மக்களுக்கு சொந்தமாக நிலம் வாங்கி, கான்கிரிட் வீடு கட்டி கொடுக்கப்படும் என்றும், நகரத்தில் உள்ளவர்களுக்கு அடுக்குமாடி வீடு கட்டி தரப்படும், என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். மேலும், தான் மந்திரவாதி அல்ல, செயல்வாதி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலளித்தார்.
Advertisement: