திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை அமுதசுரபி போன்றது என்றும், திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 17ஆம் தேதி மதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார். கொளத்தூர் தொகுதியில் வரும் 18ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து பரப்புரையை தொடங்குவதாகவும் வைகோ தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கை மக்களுக்கு வாரி வாரி வழங்க கூடிய அட்சய பாத்திரம் போல் அமுதசுரபி எனக் குறிப்பிட்டார். மேலும் திமுக கூட்டணிக்கு 234 தொகுதியில் வெற்றி என்பதுதான் இலக்கு என்றும் கூறினார்.