சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலையின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் நாக்பூர் வெடிமருந்து கழகம் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையை தங்கராஜ் பாண்டியன் என்பவர் நடத்தி வந்துள்ளார். 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் மொத்தம் 36 அறைகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியாற்றியுள்ளனர். அப்போது மருந்து பொருள்களில் நேரிட்ட உராய்வு காரணமாக, திடீர் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகியது. இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக போராடி, தீயில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில், 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமுற்ற 12க்கும் மேற்பட்டோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.