சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்த நிலையில், சென்னையில் தங்கும் விடுதிகள் அதிகமாக உள்ள திருவல்லிக்கேணியில் உள்ள விடுதிகளில் காவல்துறையினர் நேற்று இரவு தீவிர சோதனை நடத்தினர்.
மற்ற மாவட்டங்களில் இருந்து தேர்தல் பரப்புரைக்காக வந்தவர்கள் தங்கள் அடையாள அட்டைகளில் உள்ள முகவரிக்கு திரும்பி விட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். 7 மணிக்குப் பிறகு தங்கும் விடுதிகளில் அவர்கள் தங்க அனுமதி இல்லை எனவும் மீறி அவர்கள் தங்கி இருந்தால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் படுவார்கள் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement: