வங்கதேசத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒரே நாளில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
வங்கதேசம் முழுவதும் இதுவரை மொத்தம் 6 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு 9 ஆயிரத்து 213 பேர் கொரோனா நோய்ததொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளைத் தவிர பிற பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement: