காவிரி-குண்டாறு திட்டத்திற்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம் குன்னத்தூர் ஊராட்சியில் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களின் தேவையான காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதற்கட்ட பணிகளையும், மற்றும் விரிவாக்க பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

இத்திட்டத்தின் மூலம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வளம் பெற்றிடும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Advertisement: