பாஜக இந்துத்துவ கொள்கையை திணிக்க முயற்சி மேற்கொள்ளுவதால் இந்த தேர்தலோடு பாஜாகவுக்கு முடிவு கட்ட குமரி மக்களும் எதிர்பார்த்து உள்ளனர் என கன்னியாகுமரி தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரம் என்பதால் குமரியில் துறைமுகம் குறித்து, பொன். ராதாகிருஷ்ணன் அப்பட்டமாக பொய் கூறுகிறார் என, அவர் கூறி உள்ளார்.
மேலும், கடந்த மாதம் 20 ம் தேதி தூத்துக்குடி வ.உ.சி துறைமுக பொறுப்பு கழகம், கன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளன. அமித்ஷாவும் குமரிக்கு வந்து உறுதியாக துறைமுக வரும் என்று கூறினார்.
ஆனால் தேர்தல் நேரத்தை முன் நிறுத்தி பொன்.ராதாகிருஷ்னன் துறைமுகம் வாராது என்று கூறுவது அப்பாட்டமான பொய், என அவர் தெரிவித்தார்.
Advertisement: