முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி தேர்தலில் வெற்றி பெற்றால் 70 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயி ஒருவர் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு ஏற்படும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கமணியை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், அதிமுக தலைமையிலான கூட்டணி சமூகநீதி கொண்ட கூட்டணி என்பதால் அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிமுக வெற்றி பெற்றவுடன் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்தார். அதிமுக வாக்குறுதிகள் அறிவித்துள்ள இலவச வாஷிங்மெஷின் திட்டம் பெண் விடுதலைக்கான கருவியாக பார்க்கிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
மேலும், அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கும் வாக்குறுதி மற்றும், வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படுவது குறித்த வாக்குறுதி உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தும் அன்புமணி ராமதாஸ் வாக்குசேகரித்தார்.
Advertisement: