29.5 C
Chennai
April 27, 2024
தமிழகம்

“திருமங்கலத்தில் அமையவுள்ள ரயில்வே மேம்பாலம் தமிழகத்தின் சாதனை வரலாற்றில் இடம் பிடித்துள்ளது” – ஆர். பி உதயகுமார்

இலங்கையில் ராமர் கட்டிய பாலம் இலக்கிய வரலாற்றில் இடம் பிடித்துள்ளது போலவே மதுரை திருமங்கலத்தில் அமையவுள்ள ரயில்வே மேம்பாலம் தமிழகத்தின் சாதனை வரலாற்றில் இடம் பிடித்துள்ளது என அமைச்சர் ஆர். பி உதயகுமார் தெரிவித்தார்.

திருமங்கலத்தில் 33.47 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜையை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், நெடுஞ்சாலை துறை கண்காணிப்பாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை திருமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக நில எடுப்பிற்கு அரசாணையும், இந்த திட்டத்திற்குரிய அரசாணையும் ஆகிய இரண்டு அரசாணைகள் வெளியிடப்பட்டடு இதற்காக 33.47 கோடியில் ஒதுக்கீட்டு பணி தொடங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ராமர் பாலம் அமைத்துக் கொடுத்தாரே அதே போல் திருமங்கலத்திற்கு இந்தபாலம் அமைத்துக் கொடுப்பதினால் இந்தப் பகுதி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தொடர்ந்து இலங்கையில் அமைந்துள்ள பாலம் இலக்கிய வரலாற்றில் இடம் பிடித்துள்ளது அதேபோல் இந்த திருமங்கலத்தில் அமையவுளள் ரயில்வே மேம்பாலம் தமிழகத்தின் சாதனை வரலாற்றில் இடம் பிடித்துள்ளது என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading